தன்மைவினை யுணர்த்தி, இனி யுயர்திணைப் படர்க்கை வினை யுணர்த்துகின்றார். அன், ஆன், அள், ஆள் என்னு மீற்றையுடைய நான்கு சொல்லும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் ; எ - று. இவை நான்கீறும் மூன்று காலமும்பற்றி வரும். எ - டு :உண்டனன் , உண்ணாநின்றனன் , உண்பன் எனவும் ; உண்டான் உண்ணாநின்றான், உண்பான் எனவும் ; உண்டனள், உண்ணா நின்றனள், உண்பள் எனவும் ; உண்டாள் உண்ணாநின்றாள் , உண்பாள் எனவும் வரும். காலத்துக் கேற்ற எழுத்துப்பெறுங்கால் அன்னும் அள்ளும் அம் மீற்றோடும் ஆனும் ஆளும் ஆமீற்றோடு மொக்கும் . அவ் வேறுபாடெல்லாமறிந்தொட்டிக் கொள்க. (8) |