முன்னையனவேயன்றி மாரீற்றுச் சொல்லும் பல்லோர் படர்க்கையை யுணர்த்தும் ; அஃது அவைபோலப் பெயர் கொள்ளாது வினைகொண்டு முடியும் ;எ - று. பகரத்திற்குரிய காலவெழுத்து மாரைக் கிளவிக்கு மொக்கும். எள்ளுமார் வந்தார் . கொண்மார் வந்தார் என வரும் . குகரம் வந்தவழிக் கண்டுகொள்க. எ - டு :மாரைக்கிளவி வினையோடல்லது பெயரொடு முடியாமையின் . எச்சமாய்த் திரிந்து வினைகொண்ட தெனப் படாமையறிக, அஃதேல் . `பீடின்று பெருகிய திருவிற் பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே' (புறம் - 375) எனவும், `காமம் படரட வருந்திய நோய்மலி வருத்தங் காணன்மார் எமரே' ; (நற் - 64) எனவும், மாரீற்றுச்சொற் பெயர்கொண்டு வந்தனவா லெனின் : -அவை பாடுவார் காண்பார் என்னும் ஆரீற்று முற்றிச் சொல்லின் எதிர் மறையாய் ஒரு மொழிப்புணர்ச்சியான் மகரம் பெற்று நின்றன. மாரீறாயின் , அவை பாடாதொழிவார். காணாதொழிவார் என ஏவற்பொருண்மை யுணர்த்து மாறில்லையென்க. (10) |