6.வினையியல்

உயர்திணை வினை

யார் என்னும் குறிப்பு முற்று

210யா அர் என்னும் வினாவின் கிளவி
அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே.
 

யாரென்னும் வினாப்பொருளை யுணர்த்துஞ் சொல் உயர்திணை மருங்கின் முப்பாற்கு முரித்து; எ - று.

எ - டு :அவன் யார் , அவள் யார் , அவர் யார் என வரும் .

எ - டு :`ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்தெங்
கோதைகூட் டுண்ணிய தான்யார்மன் - போதெல்லாந்
தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன்
தூதொடு வாராத வண்டு'

என்புழி , வண்டுதான் யார் என , யாரென்பது அஃறிணைக் கண்ணும் வந்ததாலெனின் :- அது திணைவழுவமைதி யெனப் படும்.

இது வினைக்குறிப்பாயினும் , பல்லோர் படர்க்கை யுணர்த்தும் ஆரீற்றின் மூன்றுபா லுணர்த்தும் வேறுபாடுடை மையின் , அவற்றொடு வையாது ஈண்டு வைத்தார் .

செய்யு ளின்பநோக்கி அளபெழுந்து நின்றது.

வினாவின் கிளவியென அதன்பொரு ளுணர்த்தியவாறு.

(13)