பால் விளங்க வருமியல்பையுடைய அம்மூன் றீற்றின் கண்ணும் ஆகாரம் ஓகாரமாகுஞ் செய்யுளிடத்து; எ - று. பாலறிமரபினென்றதனால் பாலுணர்த்துதற்கண் திரிபுடை ஆமீறு விலக்குண்ணும் மார் சிறுவழக்கிற் றாகலானும் மாகாரம் ஓகாரமா தற்கேலாமையானும் , அம்மூவீறாவன ஆன் ஆள் ஆர் என்பனவேயாம். எ - டு :`வினவிநிற்றந் தோனே' (அகம் - 48), `நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே' (அகம் - 248),` பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே' (குறந் - 216), என ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தவாறு கண்டு கொள்க. வந்தோம், சென்றோம் என வழக்கினுள் வருவனவோ வெனின்;-அவை ஏமீற்றின் சிதைவென மறுக்க. (14) |