முன்னிலையீற்றுள், ஆயென்னுமீறு மேற்கூறப் பட்டனபோல ஆகாரம் ஓகாரமாஞ் செய்யுளுள் ; எ - று. எ - டு : `வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப' (அகம் - 80) என வரும். கூறப்பட்ட நான்கீற்றுத் தொழிற்பெயரும் ஆகாரம் ஓகாரமாதல் பெயரியலுட் கொள்ளப்படும். ஆயென்கிளவி ஆவோவாவது பெரும்பான்மையும் உயர்திணைக்கண் வந்தவழி யென்பதறிவித்தற்கு , முன்னிலை யதிகாரத்துக் கூறாது ஈண்டுக் கூறினார். அவற்றொடு கொள்ளுமென்றது அவற்றோ டொக்கு மென்றவாறு. (15) |