பன்மையும் ஒருமையுமாகிய பால் விளக்கிக் குறிப்புப் பொருள்பற்றி வரும் வினைச்சொல் மேற்கூறப்பட்ட அஃறிணை வினையோ டொக்கும்; எ - று. வாய்பாடு பற்றியும் பொருள்பற்றியும் கூறிய இருவகையும் எஞ்சாமற்றழுவுதற்கு `அன்னமரபின்' என்றார். ஒத்தலாவது, அஃறிணை வினைக்கோதிய ஈற்றுட் பொருந்து என வினைக்குறிப்பின் கண் வருங்காலும் , அவ்வவ் வீற்றான் அவ்வவ் விடமுங் காலமும் விளக்குதல். பொருந்துவனவாவன, ஆகாரமும் வகாரமுமொழித்துக் குற்றகர மூன்றும் அகரமுமாம், அவற்றுட் டகரமூர்ந்த குற்றுகரம் ஒன்றன் படர்க்கை (சொல் - 217) என்புழிக் கூறுதலான் , ஒழிந்த மூன்றும் ஈண்டுக் கொள்ளப்படும் . அவை அப்பால் விளக்குதல் மேற்காட்டப்பட்டனவற்றுட் கண்டு கொள்க. (24) |