இது செயல்வேண்டு மென்பதுபட வருஞ்சொல், தன்பாலானும் பிறன்பாலானுமென ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மையையுடைத்தாம்; எ - று. தன்னென்றது செயலது வினைமுதலை. ஓதல்வேண்டும் என்றவழி வேண்டுமென்பது ஓதற்கு வினைமுதலாயினாற்கும் அவனோதலை விரும்புந் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டு கொள்க. இதனான் ஒருசார் வினைச்சொற் பொருள்படும் வேறுபாடுணர்த்தினார்; உணர்த்தாக்காற் றெற்றென விளங்காமையினென்பது. (46) |