அச்சப் பொருளதும், பயமின்மைப் பொருள தும், காலப்பொருளதும், பெருமைப் பொருளதுமெனக் கொன்னைச் சொல் நான்காம்; எ-று. எ - டு : `கொன்முனை யிரவூர் போலச் சிலவா குகநீ துஞ்சு நாளே' (குறுந்-91) எனபுழி அஞ்சி வாழுமூர் எனவும் `கொன்னே கழிந்தன் றிளமை' (நாலடி-55)என்புழிப் பயமின்றிக் கழிந்தது எனவும்,`கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ', என்புழிக் காதலர் நீங்கிய காலமறிந்து வந்த வாடை எனவும், `கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே' (குறுந்-138) என்புழிப் பேரூர் துஞ்சினும் எனவும், கொன்னைச்சொல்நான்கு பொருளும்பட வந்தவாறு கண்டுகொள்க. (6) |