7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` என்று ' எண்ணுஞ் சொல்

259என்றென் கிளவியும் அதனோ ரற்றே.
 

என்றென்னு மிடைச்சொல்லும் என வென்பது போல அவ்வாறு பொருளுங் குறித்து வரும்; எ - று.

எ - டு : நரைவரு மென்றெண்ணி ( நாலடி - 11) எனவும், ` விண்ணென்று விசைத்தது ' எனவும், `ஓல்லென் றொலிக்கு மொலிபுன லூரற்கு ' ( ஐந்திணை ஐம்பது - 28) எனவும், ` பச்சென்று பசுத்தது ' எனவும், நிலனென்று நீரென்று தீயென்று எனவும் பாரி யென்றொருவனுளன் எனவும் வரும்.

(11)