மற்றென்னுஞ்சொல் வினைமாற்றும் அசை நிலையுமென இரண்டாம் ; எ - று. எ - டு : ` மற்றறிவா நல்வினையாமிளையம் ' (நாலடி - 9) என்றவழி அறஞ்செய்தல் பின்னறிவாமென அக்காலத்து வினைமாற்றுதலான் மற்றென்பது வினைமாற்றின் கண்வந்தது. ` அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற் கலுழும்' (குறுந் - 12) என அசைநிலையாய் வந்தது. கட்டுரையிடையும் மற்றோ என அசைநிலையாய் வரும். (14) |