அந்திலென்னுஞ்சொல் , ஆங்கென்னும் இடப்பொருளுணர்த்துவதும் அசைநிலையுமென இரண்டாம்; எ - று. எ - டு : ` வருமே - சேயிழை யந்திற் கொழுநற் காணிய ' ( குறுந் - 293) என்புழி ஆங்கு வருமென்றவாறாம். `அந்திற்-கச்சினன் கழலினன்' (அகம் -76) என வாளாதே அசைத்துநின்றது. (19) |