இனி , மேற்கூறப்பட்ட இடைச்சொல்லின்கட் படுமிலக்கண வேறுபாடுணர்த்துகின்றார். எச்சவும்மை நின்றவழி எஞ்சு பொருட்கிளவியாம் எதிர்மறையும்மைத் தொடர் வந்து தம்முண் மயங்குதலில்.எ - று. எ - டு : சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலுமுரியன் எனின் இயையாமை கண்டுகொள்க. ஏனையும்மையொடு மயங்குதல் விலக்காராயிற் றென்னையெனின் : - அவை எஞ்சுபொருட் கிளவியவாய் வாராமையி னென்பது. (35) |