உம்மையான் வருமெண்ணும் எனவான் வருமெண்ணும் இறுதிக்கட் டொகை பெறுதலைக் கடப்பாடாக வுடையவல்ல என்றவாறு. எனவே, தொகை பெற்றும் பெறாதும் வருமென்பதாம். எ - டு : `உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும் அம்மூ வுருபின' (சொல்- 160) எனவும், `இசையினுங்குறிப்பினும் பண்பினுந் தோன்றி' (சொல் - 297) எனவும் , `நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும்' எனவும் , `உயிரென வுடலென வின்றியமையா' எனவும் , அவ்விருவகையெண்ணுந் தொகை பெற்றும் பெறாதும் வந்தவாறு. `உயிரென வுடலென வின்றி யமையா' எனவும் அவ்விருவகை யெண்ணுந் தொகைபெற்றும் பெறாதும் வந்தவாறு. தொகையெனப் பொதுப்படக் கூறியவதனான் எண்ணுப் பெயரே யன்றி அனைத்தும் எல்லா மென்னுந் தொடக்கத் தனவுங் கொள்க. (39) |