8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`வார்தல்' `போகல்' `ஒழுகல்'

317வார்தல் போகல் ஒழுகன் மூன்றும்
நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள.
 

`வார்ந்திலங்கம் வையெயிற்று' (குறு - 14) `வார்கயிற் றொழுகை' (அகம் - 173) எனவும் , `போகு கொடி மருங்குல்' `வெள்வேல் விடத்தேரொடு காருடை போகி' (பதிற் - 13) எனவும் ; `ஒழுகுகொடி மருங்குல்' `மால்வரை யொழுகிய வாழை' (சிறுபாண் - 21) எனவும் , வார்தல் , போகல் , ஒழுகல் என்னு மூன்று சொல்லும் , நேர்மையும் நெடுமையுமாகிய பண்புணர்த்தும் ; எ - று.

(21)