கூறப்பட்ட இரண்டனுள் யாதென்னும் வினாச்சொல் அறியாப்பொருள் வினாவாதலேயன்றி அறிந்த பொருட்கண் ஐயம் நீக்குதற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து; எ-று. எ - டு: இம் மரங்களுள் கருங்காலி யாது, நம்மெரு தைந்தனுள் கெட்ட எருது யாது என வரும். நமருள் யாவர் போயினார், அவற்றுள் எவ்வெருது கெட்டது எனப் பிறவும் அறிந்த பொருள்வயின் ஐயந்தீர்தற்குத் தெரிந்த கிளவியாய் வருதலின், அவையும் ஈண்டமைக்கற்பால எனின்:- அவை அறிந்த பொருள்வயின் ஐயந்தீர்தற்கல்லது யாண்டும் வாராமையின், ஈண்டமைக்கப்படாவென்பது. இதனால் வினாவழுவமைத்தார். (32) |