8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`ஒய்தல்' `ஆய்தல்' `நிழத்தல்' `சாய்'

330ஒய்தல் ஆய்தல் நிழத்தல் சா அய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.
 

`வேனிலுழந்த வறிதுயங் கோய் களிறு' (கலி-9), `பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை' (கலி-99) `நிழத்த யானை மேய்புலம் படர' (மது3-03), `கயலறலெதிரக் கடும்புனற் சாஅய்' (நெடுநல்-18) என ஓய்தன் முதலாயின நுணுக்கமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. ஆய்ந்த தானை - பொங்குதல் விசித்தலானுணுகிய தானை. 1உள்ள தென்றது முன்னுணுகாதுள்ளது,எ - று.

(34)

1 `வீய்தலா னுணுகிய தானை' எனவும் பாடம்.