8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`துவைத்தல்' `சிலைத்தல்' `இயம்பல்' `இரங்கல்'

358துவைத்தலுஞ் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர்.
 

`வரிவளை துவைம்ப' எனவும், `ஆமா நல்லேறு சிலைப்ப' (முருகு - 915) எனவும்

`கடிமரந் தடியு மோகை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப' (புறம் - 96)

எனவும் , `ஏறிரங்கிருளிடை' (கலி - 46) எனவும், துவைத்தன் முதலாயின இசைப்பொரு ளுணர்த்தும் என்றவாறு.

(62)