1.கிளவியாக்கம்

3.இடம்

பொருட்பெயரும் சுட்டுப்பெயரும் அமையும் வகை

39முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே.
 

இயற்பெயரும் சுட்டுப்பெயரும் வினைக்கொருங்கியலும்வழிச் சுட்டுப்பெயரை முற்படக் கூறுதல் செய்யுளுள் உரித்து; எ - று.
எ - டு:

அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன்
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர்வாழ்த்தி - முகனமர்ந்து
அன்னை யலர்கடப்பந் தாரணியில் என்னைகொல்
பின்னை யதன்கண் விழைவு."

எனவரும். இதனுள் சேந்தன் என்பது இயற்பெயர்.

ஒருவினை கொள்வழிச் சுட்டுப்பெயர் முற்கிளத்தல் வந்தவழிக் கண்டு கொள்க.

இது செய்யுளிடத்து மரபுவழு அமைத்தவாறு.

(39)