7.இடையியல்

சொல்லும் பொருளும்

கூறிய சொற்கள் பிற பொருளும் உணர்த்தல்

390கூறிய கிளவிப் பொருள்நிலை அல்ல
வேறுபிற தோன்றினும் அவற்றொடுங் கொளவே.
 

முன்னும் பின்னும் வருபவவை நாடியவழி, உரிச்சொற்குக் கூறப்பட்ட பொருளேயன்றிப் பிற பொருடோன்று மாயினும், கூறப்பட்ட வற்றோடு அவற்றையுங் கொள்க; எ - று.

`கடிநாறும் பூந்துணர்' என்ற வழிக் கடியென்பது முன்னும் பின்னும் வருபவை நாட, வரைவு முதலாயின பொருட்கேலாது மணப்பொருட்டாயினவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன.

(94)