9.எச்சவியல்

பொருள்கோள்

அதற்கு மேலும் ஒரு முடிபு

408பொருள்தெரி மருங்கின்
ஈற்றடி இருசீர் எருத்துவயின் திரிபுந்
தோற்றமும் வரையார் அடிமறி யான.
 

பொருளாராயுங்கால், அடிமறிச் செய்யுட்கண் ஈற்றடியது இறுதிச்சீர் எருத்தடியிற் சென்று திரிதலும் வரையார்; எ - று.

சீர்நிலை திரியாது தடுமாறு மென்றாராகலின் சீர்நிலை திரிதலும் ஒரு வழிக்கண்டு எய்தியதிகந்துபடாமற் காத்தவாறு.

இலக்கியம் வந்தவழிக் கண்டுகொள்க.

எருத்துவயி னென்பதற்கு ஈற்றயற்சீர்வயி னென்று பொருளுரைத்து.

`சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளி ராரணங் கினரே
சார னாட நீவரு தீயே
வார லெனினே யானஞ் சுவலே'

என்புழி அஞ்சுவல் யான் என இறுதிச்சீர் ஈற்றயற்சீர்வயிற் சென்று திரிந்ததென்று உதாரணங் காட்டினாரால் உரையாசிரியரெனின் : - யானஞ்சுவலென நின்றாங்கு நிற்பவும் பொருள் செல்லுமாகலின் . இவ்வாறு திரிதல் பொருந்தாமையின், அவர்க்கது கருத்தன்றென்க.

எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமாயினும், உரைப்போர் குறிப்பான் எருத்தென்றும் ஈற்றடியென்றுங் கூறினார்.

`உரைப்போர் குறிப்பி னுணர்வகை யன்றி
யிடைப்பான் முதலீ றென்றிவை தம்முண்
மதிக்கப் படாதன மண்டல யாப்பே'

என உரைப்போர் குறிப்பான் முதலுமிடையு மீறுங்கோடல் பிறருங் கூறினாரென்பது.

(12)