கண்டீரெனவும் , கொண்டீரெனவும் , சென்றதெனவும் போயிற்றெனவும் வரும் வினைச்சொன் னான்கும் ; வினாவொடு பொருந்தி நின்றவழி அசைநிலையடுக்காம்; எ - று. கட்டுரையகத்து ஒருவன் ஒன்று சொல்லியவழி அதற்குடம்படாதான் கண்டீரே கண்டீரே என்னும் ; ஈண்டு வினைச்சொற் பொருண்மையும் வினாப்பொருண்மையு மின்மையால் . அசைநிலையாயினவாறு கண்டுகொள்க. வரையாது கூறினமையால் , கண்டீரே எனச் சிறுபான்மை அடுக்காது வருதலுங் கொள்க. ஏனையவும் ஏற்றவழி அடுக்கியும் அடுக்காதும் அசைநிலையாம். அவை இக்காலத்தரிய ; வந்தழிக் கண்டுகொள்க. (29) |