மன்னை யொழியிசையும், தில்லை யொழியிசையும், ஓகார வொழியிசையும் ஆகிய ஒழியிசை யெச்ச மூன்றும் ஒழியிசையான் முடியும்; எ - று. எ - டு : `கூரியதோர் வாண்மன்' `வருகதில் லம்மவெஞ்சேரி சேர' (அகம் - 276) கொளலோ கொண்டான் என்னும் ஒழியிசையெச்சம், முறையானே, திட்ப மின்று. வந்தா லின்னது செய்வல், கொண்டுய்யப் போமா றறிந்திலன் என்னும் ஒழியிசையான் முடிந்தவாறு. பிறவும் முடித்தற்கேற்கும் ஒழியிசை யறிந்துகொள்க. (38) |