வினைவேறுபடும் பலபொருளொரு சொல்லும் வினை வேறுபடாப் பலபொருளொரு சொல்லும் என இரண்டு வகைப்படும் பலபொருளொரு சொல் ; எ-று. இனமுஞ் சார்பும் உளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப்புடைமையின், அதனாற் பெயர் கொடுத்தார், ஆதீண்டு குற்றி யென்பது போல. இலக்கணச் சூத்திரங்களே1 யமையும் இச்சூத்திரம் வேண்டாபிறவெனின் : - இருவகைய வென்னும் வரையறை யவற்றால் பொறப்படாமையானும், வகுத்துப் பின்னும் இலக்கணங் கூறியவழிப் பொருள் இனிது விளங்குதலானும், இச்சூத்திரம் வேண்டுமென்பது. (52)
1. இலக்கணச் சூத்திரங்கள் வரையறை(Definition)கூறும் நூற்பாக்கள். |