1.கிளவியாக்கம்

புறனடை

இடத்துக்குப் புறனடை

58நின்றாங்கு இசைத்தல் இவணியல் பின்றே.
 

ஈறு திரியாது நின்றாங்கு நின்று உயர்திணையாயிசைத்தல் ஈண்டு இயல்பின்று ; எ-று.

ஈண்டென்றது காலமுதலாகிய சொற்களை. அவை இடையீடின்றி மேற்சொல்லப்பட்டு நிற்றலின் `இவண்' என்றார்.

இவணியல்பின்று எனவே, குடிமை ஆண்மை முதலாயின சொல்லின்கண் குடிமைநல்லன், வேந்து செங்கோலன் என நின்றாங்கு நின்று உயர்திணையாயிசைத்தல் இயல்புடைத் தென்பதாம்.

(58)