2.வேற்றுமையியல்

முதல் வேற்றுமை

எழுவாய் வேற்றுமை

65அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே.
 

மேற் சொல்லப்பட்ட வேற்றுமையுள் , முதற்கட் பெயரென்று கூறப்பட்ட வேற்றுமையாவது பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாம் ; எ - று .

பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாவது , உருபும் விளியு மேலாது பிறிதொன்றனோடு தொகாது நிற்கும் நிலைமை , எனவே , உருபும் விளியுமேற்றும் பிரிதொன்றனோடு தொக்கும் நின்ற பெயர் எழுவாய் வேற்றுமையாகா தென்றவாறாம்.

எ - டு:ஆ , அவன் என வரும்.

(4)