மேல் கு எனப் பெயர்கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச்சொல் நான்காவதாம். அது யாதானுமொரு பொருளாயினும் அதனை யேற்று நிற்கும்; எ -று. எ - டு: அந்தணற் காவைக் கொடுத்தான் எனவரும். மாணாக்கற்கு நூற்பொருளுரைத்தான் எனக் கொடைப் பொருளவாகிய சொல்லானன்றிப் பிற வாய்பாட்டாற் கூறப்படுவனவும் ; மாணாக்கற்கு அறிவு கொடுத்தானெனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான்கட் செல்லாது ஆண்டுத் தோன்றும் பொருளுமெல்லா மடங்குதற்கு `எப் பொருளாயினும் ' என்றார். பிறபொருளு முளவாயினும், கோடற்பொருள் சிறந்தமையின், எப்பொருளாயினுங் கொள்ளு மென்றார். (14) |