முதற் சொல்லோடு தொடர்ந்த சினைச் சொல்லிற்கு ஆறாம் வேற்றுமை முதற்கண் வருமாயின், சினைச் சொல்லின்கண் இரண்டாம் வேற்றுமையே வரும்; எ-று. எ - டு: யானையது கோட்டைக் குறைத்தான் என வரும். `சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும்' (சொல்- 85) என்றதனான் முதற்சினைக் கிளவிக்கும் இரண்டு வேற்றுமையு மெய்துவதனை நியமித்தவாறு.1 இது வருஞ் சூத்திரத்திற்கு மொக்கும். (4) 1. இங்கு ஐ தான் வருமென்பது. (இரண்டு வேற்றுமைகள் வர இருக்க ஒன்றனை நியமித்தல்.) |