தடுமாறு தொழிலொடு புணர்ந்த பெயருள், இறுதிப் பெயர்முன்னர்ப்பொருள் வேறுபாடுணர்த்துஞ் சொல்வரின் இச்சொல்லான் அப்பொருள் வேற்றுமை தெரிவர் உணர்வோர்; எ - று. எ - டு:புலிகொல்யானை யோடாநின்றது, புலிகொல் யானைக் கோடு வந்தன என வரும். பிறமயக்கம் போலாது ஈண்டுப்பொருள் வேறுபா டுணர்ந்தல்லது உருபு விரிக்கலாகாமையின், `மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப' என்றார். முன் புலியைக் கொன்ற யானை, பின் பிறிதொன்றானான் இறந்துழியும் புலிகொல்யானைக்கோடு வந்தனவென்ப; அவ்வழிக் கொன்றது கொல்லப்பட்டதென்னும் வேறுபாடு குறிப்பானுணரப்படுமென்பார் `உணருமோர்' என்றார். பிறவுமன்ன. (13) |