இது, நற்றாய்க்கு உரியதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. செவிலியுணர்வோடு உடம்பட்ட வுள்ளத்தளாயின் நற்றாய்க்கும் மேற்சொல்லப்பட்டவை யெல்லாம் வரையப் படா வென்றவாறு2. உணர்வுடம் படுதலாவது தலைவியை யுற்று நோக்கும் நிகழ்ந்தவழி வன்றித்3 தானும் செவிலியைப்போல உற்று நோக்காளென்றுகொள்க. இப்பொருள்மேற் கிளவி வருவன உளவேனுஞ் செவிலியைப்போல வொருப்பட்டவுள்ளத்தளாயின் அவள்கண்ணும் இக் கிளவியெல்லாம் நிகழும் என்றவாறு. உடம்படாதவாறு என்னை யெனின், யாரிடத்தும் மக்களை வளர்ப்பார் செவிலியராகலானும் தமக்குத் தம் இல்லற நிலைக்குக் கடவ பகுதியான அறனும் பொருளும் இன்பமும் வேண்டுதலானும் கூற்றொடு வேறுபாடு தோன்றாது. (26)
1. `தாய்க்கும்' என்றார் இவட்கு அத்துணை பயின்றுவாரா என்றற்கு. அது நற்றாய் இல்லறம் நிகழ்த்துங் கருத்து வேறு உடைமையின் உற்று நோக்காள் செவிலியே தலைவியை உற்று நோக்கி ஒழுகுவாளாதலின் இலக்கணமுண்மையின் இலக்கியம் வந்துழிக்காண்க. [தொல். கள. 25. நச்சி.] (பாடம்) 2. வரையப்பட்ட தென்றவாறு. (பாடம்) 3. நோக்காதிகழ்ந்தவழியன்றித்.
|