இது, சொல்லப்பட்ட கூட்டத்திற்குக் குறியிடம் கூறுவா னுணர்த்துதல் நுதலிற்று. தலைவன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்பு, தலைவனெல்லையை மறத்தல் தலைவிக்கு அறமாக லின்மையானே குறியிடம் கூறுதல் தலைமகள்தாம்; அது தான் சேறற் குரிய இடமாதலான் என்றவாறு. எனவே, இத்துணைக்கூறின் மிகையன்று என்றவாறாம். (30)
|