களவியல்

129இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனையோர்1 கிளவி கேட்கும்வழி யதுவே
மனையகம் புகாஅக்2 காலை யான .

என்றது , இரவுக் குறிக்கு இடமுணர்த்துதல் நுதலிற்று .

இரவுக்குறியாம் இடமே இல்லகத்துள் மனையகம் புகாவிடத்துக்கண் மனையோர் கிளவிகேட்கும் அணிமைத் தாம் என்றவாறு .

எனவே , மனைக்கும் எயிற்கும் நடுவணதோரிடம் என்று கொள்ளப்படும்.

(41)

1. மனையோள் .

2. அகமனையிற் புகாக்காலை எனவே இரவுக்குறி அங்ஙனம் சில நாள் நிகழ்ந்த பின்னர் அச்சமின்றி உள்மனையிற் சென்று கூடவும் பெறும் என்பது கூறியதாம் . ( தொல் . 10 -40 . நச்சி)