களவியல்

133மறைந்த ஒழுக்கத் தோரையும் நாளுந்
துறந்த ஒழுக்கங்1 கிழவற் கில்லை.

என்றது , தலைவற்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று .

களவொழுக்கத்து முகுர்த்தமும்2 நாளும் துறந்தொழுகும் ஒழுக்கம் தலைவற்கு இல்லை என்றவாறு.

என்றதனான் , ஆண்டு அறத்தின் வழுவினானல்லன் தலைவிமாட்டுத் தலையளி குறைதலான் என்றவாறு.

(45)

1. ஒழுக்கமாவது சீலமாதலின் சீலம் காரணத்தால் துறப்பது தீதாகிய இராசியும் நாளும் என்பது பெற்றாம் . நாளாவது அவ்விராசி மண்டிலம் முழுவதும் ( தொல் . கள . 44. நச்சி)

(பாடம்) 2. முழுத்தமும்.