இது, வரையும் பகுதி உணர்த்துதல் நுதலிற்று. களவு வெளிப்பட்டபின் வரைதலும் களவு வெளிப்படாமை வரைதலும் என அவ்விரண்டென்று சொல்லுவர் வரையும் நெறி என்றவாறு. இதனால் சொல்லியது இருவாற்றானும் அறன் இழுக்காதென்றவாறு. அஃது இழுக்காதவாறு வருகின்ற சூத்திரத்தான் உணர்க. (50)
|