இது மேலதற்கொரு புறனடை . கொடுப்போரின்றியும் , கரண நிகழ்ச்சி உண்டு ; புணர்ந்துடன் போகிய காலத்து என்றவாறு . எனவே கற்பிற்குக் கரணநிகழ்ச்சி ஒருதலையாயிற்று. இதனானே கொடுப்போ ரில்வழியும் கரணநிகழ்ச்சி உண்மையும் ஒழுக்கக் குறைபாடு இன்மையும் கொள்க . "பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொல்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே . " ( குறுந் . 15) இதனுள் விடலையொடு மடந்தைநட்பு பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொண்டு நாலூர்க் கோசர் நன்மொழிபோல வாயாயிற்று எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும் விடலை எனப் பாலை நிலத்திற்குரிய தலைவன் பெயர் கூறினமையானும் கொடுப்போரின்றியும் கரணம் நிகழ்ந்தவாறு காண்க. (2)
|