இதுவும் தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்திற்று. இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும். உதாரணம் "மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை முகிழ்செய முள்கிய3 தொடர்பவள்4 உண்கண் அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய் இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ; இலங்கேர் எல்வளை ஏர்தழை தைஇ நலஞ்செய்5 நல்கிய தொடர்பவள் சாஅய்ப் புலந்தழப் புல்லாது விடுவாய் இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண்நீ." (கலித். 125) என வரும்.(17)
1. பரத்தமை. 2. கிழத்தி. 3. மூழ்கிய. 4. தொடர்பிவள். 5. நலஞ்சொல.
|