இது, தலைவிக் குரியதொரு மரபுணர்த்திற்று. தலைவன் குறிப்பறிதல் வேண்டியுந் தலைவி தனது அகமலிந்த ஊடல் நீங்கும் இடத்தினும் வேற்றுமைக்கிளவி தோற்றவும் பெறும் என்றவாறு. "யாரிவன் என்கூந்தல் கொள்வான்" (கலித்.89) எனவும், "யாரையோ எம்மில் புகுதருவாய்" (கலித். 98) எனவும் கூறியவாறு காண்க.(18)
|