கற்பியல்

162கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே.

இதுவும் அது.

கிழவோன் விளையாட்டும் காமத்தின் மிகுதியைக் காட்டும் என்றவாறு.

ஆங்கு-அசை.

"அகலநீ துறத்தலின் அழுதோவா உண்கணெம்
புதல்வனை மெய்தீண்டப் பொருந்துதல் இயைபவால்
நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின்
தமர்பாடுந் துணங்கையுள் அரவம்வந் தெடுப்புமே".

(கலித்.70)

என வரும்.

விளையாட்டாற் காமமிக்கு உறங்காமை கண்டுகொள்க.

(23)