கற்பியல்

177அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்1
சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர்.

இது மேலதற் கொரு புறனடை.

வாயில்கண் மகிழ்ச்சிப் பொருண்மை கூறுதலன்றி அன்பு நீங்கிய கிளவி கூறினாராயிற் றலைவன் சிறைப்புறத்தானாகப் பெறுவர் எனச் சொல்லுவர் என்றவாறு.

இதுவும் ஓரிலக்கணங் கூறியவாறு.

(38)

1. `தோன்றின்' என்பது படைத்துக் கொண்டு கூறுவர் என்பதா மாகலின் குறித்தன்று என்பது போயின்று என்பது போல றகரம் ஊர்ந்த குற்றியலுகரம் (தொல். பொருள். 179. நச்சி.)