என் - எனின். இது பெண்டிர்க் குரியதோர் இயல்புணர்த்திற்று. செறிவு என்பது - அடக்கம் நிறைவு என்பது - அமைதி செம்மை என்பது - மனங்கோடாமை செப்பு என்பது - சொல்லுதல். அறிவு என்பது - நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிதல். அருமை என்பது - உள்ளக் கருத்தறிதலருமை. இவை எல்லாம் பெண்பக்கத்தின என்றவாறு. இதனாற் சொல்லியது மேற்சொல்லிய அறத்தொடுநிலைவகை. இனிக் கூறுகின்ற வரைவுகடாதற்குப் பகுதியும் உண்மை வகையானும் புனைந்துரைவகையானும் கூறுங்கால் இவை பேதையராகிய பெண்டிர்க்கு இயையுமோ என ஐயுற்றார்க்குக் கூறப்பட்டது. (14)
|