பொருளியல்

209தேரும் யானையுங் குதிரையும் பிறவும்
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப.

என் - எனின். இது தலைமகற்குரியதோர் மரபுணர்த்திற்று.

களவுக்காலத்துத் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து சேறலும் உரியர் என்றவாறு. களவின்கண் என்பது அதிகாரத்தான் வந்தது.

"நெடுந்தேர் கடாஅய்த் தமியராய் வந்தோர்
கடுங்களிறு காணீரோ என்றீர் - கொடுங்குழையார்
யானை அதருள்ளி நிற்பரோ தம்புனத்து
ஏனல் கிளிகடிகு வார்."

பிறவு மன்ன.

`ஊர்ந்தன ரியங்கலு முரியர்' என்றமையால் தனி வருதல் பெரும்பான்மை . இதனை எச்ச வும்மையாக்கி வையமூர்தலும் இளையரோடு வருதலுங் கொள்க.

"வல்வே லிளையரொ டெல்லிச் செல்லாது"

(அகம். 120)

என வரும்.

பிறவுமன்ன. இதனால் சொல்லியது பெரியார் இவ்வாறு செய்வார் எனவுங் கூறியவாறாம்.

(17)