என் - எனின். இஃது ஒருசார் வழுவமைத்தலை நுதலிற்று. உண்டற்றொழிலுக் குரியவல்லாத பொருளை உண்டனவாகக் கூறலும் மரபென்றவாறு. ` பசலையால் உணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால் ' (கலித். 15) எனவும்,` நீலமுண்டதுகில் ' எனவும்," கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று " (குறள். 1244) எனவும் வரும் .இது சொல்லின்கட் கிடந்ததோ ரொழிபு. (18)
1. இன்னும் உய்த்துக்கொண்டுணர்தல் என்பதனான். உண்ணப்படுதற்குரிய அல்லாத பொருளதனைப் பிறர் உண்ணப்பட்டது போலக் கூறலும் மரபாம் என்பது பொருளாகக் கொள்க. (தொல், பொருள், 213 நச்சி. )
|