பொருளியல்

223மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய.

என் - எனின். கற்புக்காலத்துத் தலைமகட் குரியதோர் மரபு உணர்த்திற்று

தலைமகள் உயர்வும் தலைமகன் தாழ்வும் ஆராயுங் காலத்துப் புலவிக்காலத்து உரிய வென்றவாறு.

எனவே , ஒழிந்த ஊடல் துனியென்பனவற்றிற் குரியவாம் .

"ஒரூஉக் கொடி யியல் நல்லார் குரனாற்றத் துற்ற 1
முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத்
தொடிய எமக்கு நீ யாரைப் பெரியார்க்கு
அடியரோ ஆற்றாதவர் ;
கடியர்நமக்கி யார்சொலத் தக்கார் மாற்று2
வினைக்கெட்டு வாயெல்லா வெண்மை யுரையாது கூறுநின்3
மாய மருள்வா ரகத்து :
ஆயிழாய் , நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா
என்கண் எவனோ தவறு . "

(கலித் . 88 )

இதனுள் தலைமகன் பணிவுந் தலைவி யுயர்வுங் காண்க. இஃது ஈண்டுக் கூறியதென்னை? `காமக் கடப்பினுட் பணிந்த கிளவி, (கற்பியல். 16) யென மேற்கூறப்பட்டதாலெனின், ஆண்டுக் கூறியது ஊடல் புலவி துனியென்னு மூன்றிற்கும் பொதுப்பட நிற்றலின், இது புலவிக்கே உரித்தென்னுஞ் சிறப்பு நோக்கிக் கூறியவாறு காண்க.

(31)

(பாடம்) 1. தேற்ற .

2. கடியத் தமக்கினியார் சொலத்தக்க ராமற்று.

3. உரையாதி சென்றுநின்.