இது, நிறுத்தமுறையானே முல்லைக்குரிய மக்கட்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஆடூஉ திணைப்பெயர் ஆயர் வேட்டுவர் - ஆண் மக்களைப்பபற்றி வரும் திணைப்பெயர் ஆயர் எனவும் வேட்டுவர் எனவும் வரும். ஆவயின் வரும். கிழவரும் உளர் - அவ்விடத்து வரும் கிழவரும் உளர். ஆயர் என்பார் நிரைமேய்ப்பார். வேட்டுவர் என்பவர் வேட்டைத் தொழில் செய்வார். அஃது எயினர் என்னும் குலப்பெயருடையார் மேல் தொழிற்பெயராகி வந்தது. "வந்தது கொண்டு வாராதது முடித்தல் " (மரபு. 112) எனபதனான் ஆய்ச்சியர் எனவும் கொள்க. அவ்விரு திறத்தாரும் காடு பற்றி வாழ்தலின் அந்நிலத்தின் மக்களாயினார். அவ்வயின் வரூஉம் கிழவர் இருவகையர், அந்நிலத்தை ஆட்சி பெற்றோரும், அந்நிலத்து உள்ளோரும் என. 'குறும்பொறைநாடன் ' என்பதுபோல்வன ஆட்சிபற்றி வரும். 'பொதுவன் ஆயன், என்பன குலம் பற்றி வரும். [சுட்டு நீண்டு இசைத்தது. ஏகாரம் ஈற்றசை.] (23)
|