பொருளியல்

234உயர்மொழிக் கிளவி1 உறழுங் கிளவி
ஐயக் கிளவி ஆடூஉவிற் குரித்தே.

என் - எனின் , தலைமகற்குந் தலைமகட்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

உயர்த்துச் சொல்லுதற்குரிய கிளவி தலைமகற்குந் தலைமகட்கும் ஒத்தகிளவி , ஐயக்கிளவி தலைமகற்கே உரித்தென்றவாறு.

தலைவிமாட்டு ஐயக்கிளவி யின்றென்றவாறாம், அதனாற் குற்றமென்னையெனின், தெய்வமென்று ஐயுறுங்கால் அதனை முன்பு கண்டறிவாளாதல் வேண்டும் . காணாமையின் ஐயமிலள் என்க. இனி உயர்த்துச் சொல்லுதல் உளவாம்.

"அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன்
மகனே தோழி யென்றனள்".

(அகம்.48)

என்பது உயர்த்துச் சொல்லியவாறு.

தலைவன் உயர்த்துச் சொல்லியதற்குச் செய்யுள்:-

"மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி."

(குறள்.1118)

பிறவு மன்ன. ஐயக்கிளவி களவியலுட் கூறப்பட்டது.
(42)

(பாடம்) 1. குரிய.