என் - எனின் . இது தோழிக்குரியதோர் மரபுவழுக் காத்தலை நுதலிற்று. தலைமகற் குற்ற துன்பம் பரிகரித்தல் தோழி இயல்பாகலின் அவட்குரியதாகும் அறிவு என்றவாறு. அதனானே யன்றே: "பால்மருள் மருப்பின் உரல்புரை பாவடி" என்னும் பாலைக் கலியுள்,"கிழவர் இன்னோர்1 என்னாது பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையும்" (கலித். 21) எனக் கூறினாள் என்று கொள்க.(43)
(பாடம்) 1. இன்னர்.
|