இது, நடுவணைந் திணைக்குரிய தலைமக்களைக் கூறி, அதன் புறத்த வாகிய கைக்கிளை பெருந்திணைக்குரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் - அடித்தொழில் செய்வார் பக்கத்தினும், வினைசெய்வார் பக்கத்தினும் கடிவரைஇல் (மேற் சொல்லப்பட்ட புணர்தல் முதலான பொருளைக் கூறல்) கடிந்து நீக்கும் நிலைமையில்லை, புறத்து என்மனார் புலவர் - ஐந்திணைப் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்கண் என்று சொல்வர் புலவர். 'புணர்தல் முதலான பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது.'வினை செய்வார்' என்பதனால் அடியரல்லாதார் என்பது கொள்க.இவர் அகத்திணைக்கு உரியல்லரோ வெனின், அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடையராகலானும். குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார் எனபதனானும், இவர் புறப்பொருட்குரியராயினார் என்க. எனவே, இவ்வெழுவகைத் திணையும் அகம் புறம் என இருவகையாயின. | என்நோற் றனைகொல்லோ, நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல் ஈங்குருச் 2சுருங்கி, இயலுவாய் நின்னொடு உசாவுவென் நின்றீத்தை; | அன்னையோ, | காண்டகை இல்லாக் குறள்நாழிப் போழ்தினான் ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை வேண்டுவல் என்று விலக்கினை நின்போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று; | மாண்ட, | எறித்த படைபோல முடங்கி மடங்கி நெறித்துவிட்டன்ன நிறையோரால் என்னைப் பொறுக்கல்லா நோய்செய்தாய் பொறீஇ 3நிறுக்கல்லேன் நீ நல்கின் உண்டென் னுயிர்; | குறிப்புக்காண், | வல்லுப் பலகை யெடுத்து நிறுத்தன்ன கல்லாக்குறள கடும்பகல் வந்தெம்மை இல்லத்து வாவென மெய்கொளீஇ 4எல்லாநின் பெண்டிர் உளர்மன்னோ கூறு; | நல்லாய்கேள், | உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான் புக்ககலம் புல்லின்நெஞ் சூன்றும் புறம்புல்லின் அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் அருளீமோ பக்கத்துப் புல்லச் சிறிது; | போசீத்தை, | மக்கண் முரியேநீ மாறினித் தொக்க மரக்கோட்டஞ் சேர்ந்தெழுந்த பூங்கொடிபோல நிரப்பமில் யாக்கை தழீஇயின ரெம்மைப் புரப்பேமென்பாரும் பலராற் பரத்தையன் பக்கத்துப் புல்லீயா யென்னுமாற்றொக்க உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு; | கழிந்தாங்கே, | யாம்வீழ்து மென்றுதன் பின்செலவு முற்றியாக் கூனி குழையுங் குழைவுகாண்; | யாமை, | எடுத்து நிறுத்தற்றாற் றோளிரண்டும் வீசி, யாம்வேண்டே மென்று விலக்கவு மெம்வீழுங் காமர் நடக்கு நடைகாண் கவர்கணைச் சாமனார் தம்முன் செலவு காண்க5 | ஓஒகாண், | நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணாம் உசாவுவங் கோனடி தொட்டேன்; | ஆங்காக, | சாயலின் மார்ப அடங்கினேன் ஏஎ பேயும் பேயுந் துள்ள லுறுமெனக் கோயிலுட் கண்டார் நகாஅமை வேண்டுவல் தண்டாத் தகடுருவ வேறாகக் காவின்கீழ் போதர் அகடாரப் புல்லி முயங்குவேம் துகடீர்பு காட்சி அவையத்தார் ஓலை முகடுகாப்பு யாத்துவிட்டாங்கு." | (கலி.மரு.29) இதனுள் ஒருவரையொருவர் இழித்துக் கூறினமையான் அடியார் என்பதூஉம் மிக்க காமத்தின் வேறுபட்டு வருதலாற் பெருந்திணைப்பாற்படும் என்பதூஉம் கண்டு கொள்க; இதுதானே கைக்கிளைக்கும் உதாரணமாம். வினைவலர் மாட்டு வருவன வந்தவழிக் கண்டுகொள்க. (25)
1. 'அடியோர்' எனவே இருபால் தலைமக்களும் அடங்கிற்று.'கடிவரையில' என்றதனால் அவருள் பரத்தையரும் உளரென்று கொள்க. (நச்சி.)(தொல்.பொருள்.23.) (பாடம்) 2. ஈங்குச். 3. போறி. 4. கைகொளிய. 5. காண்.
|