என் - னின். மேலனவற்றிற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) மேற்பாகுபடுத்துணர்த்தப்பட்ட சொற்கள் கூறியவாற்றானன்றித் தத்தமரபில் தோன்றும் பொருளும் உளவாமென்றவாறு. மன் ஆக்கங்குறித்துவந்தது. ஈண்டுமரபென்றது பயிற்சியை. இதனானே நூல் செய்கின்ற காலத்து வினைமுதலாகிய பொருள்கள் ஓதிய வாய்பாட்டான் வருதல் பெருவழக்கிற்றென்று கொள்ளப்படும். 'முழவுறழ் தடக்கையி னியல வேந்தி' | (திருமுருகாற். 215) | 'மாவென்ற மடநோக்கின்' | (கலித். 57) | 'வேய்வென்ற தோள்' | (கலித்.138) | 'மாரிவீ ழிருங்கூந்தல்' | (கலித். 14) | 'பொன்னுரை கடுக்குந் திதலையர்' | (திருமுருகாற் . 145) | 'குறுந்தொடி ஏய்க்கு மெலிந்துவீங்கு திவவின்' | (பெரும்பாண். 13) | 'செயலையந் தளிரேய்க்கு எழினலம்' | (கலித். 15) | 'பாஅன் மருண் மருப்பி னுரல்புரை பாவடி' | (கலித். 21) | 'வலம்புரி புரையும் வால்நரை முடியினர்' | (திருமுருகாற். 127) | 'ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல' | (அகம். 22) | 'தாமரைபோல் வாள்முகம்' | (திணைமாலை. 1) | 'காரவர்போ னோக்கினு நோக்கும்' | | 'ஒழுகு நோன்பக டொப்பக் குழீஇ' | (அகம்.35) |
எனவும் பிறவுமன்ன. (17)
|