உவமையியல்

288தத்த மரபில் தோன்றுமன் பொருளே.
என் - னின். மேலனவற்றிற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்) மேற்பாகுபடுத்துணர்த்தப்பட்ட சொற்கள் கூறியவாற்றானன்றித் தத்தமரபில் தோன்றும் பொருளும் உளவாமென்றவாறு.

மன் ஆக்கங்குறித்துவந்தது. ஈண்டுமரபென்றது பயிற்சியை. இதனானே நூல் செய்கின்ற காலத்து வினைமுதலாகிய பொருள்கள் ஓதிய வாய்பாட்டான் வருதல் பெருவழக்கிற்றென்று கொள்ளப்படும்.

'முழவுறழ் தடக்கையி னியல வேந்தி'

(திருமுருகாற். 215)

'மாவென்ற மடநோக்கின்'

(கலித். 57)

'வேய்வென்ற தோள்'

(கலித்.138)

'மாரிவீ ழிருங்கூந்தல்'

(கலித். 14)

'பொன்னுரை கடுக்குந் திதலையர்'

(திருமுருகாற் . 145)

'குறுந்தொடி ஏய்க்கு மெலிந்துவீங்கு திவவின்'

(பெரும்பாண். 13)

'செயலையந் தளிரேய்க்கு எழினலம்'

(கலித். 15)

'பாஅன் மருண் மருப்பி னுரல்புரை பாவடி'

(கலித். 21)

'வலம்புரி புரையும் வால்நரை முடியினர்'

(திருமுருகாற். 127)

'ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல'

(அகம். 22)

'தாமரைபோல் வாள்முகம்'

(திணைமாலை. 1)

'காரவர்போ னோக்கினு நோக்கும்'

'ஒழுகு நோன்பக டொப்பக் குழீஇ'

(அகம்.35)

எனவும் பிறவுமன்ன.

(17)