உவமையியல்

289நாலிரண் டாகும் பாலுமா ருண்டே.
என் - னின். எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகை யாதலேயன்றி எட்டாம் பக்கமும் உண்டு என்றவாறு.

அவையாவன: வினையும் வினைக்குறிப்புமென இருவகையாம். பயன் என்பது. நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகையாம். மெய்யென்பது வடிவும் அளவும் என இருவகையாம். உருவென்பது. நிறமுங் குணமுமென இருவகையாம் இவ்வகையினா வெட்டாயின.

'பொன்னன்ன செல்வத்தன்' இது வினைக்குறிப்பு.

'ஞாயி றனையைநின் பகைவர்க்கு'

(புறம்.59 - இது தீப்பயன்).

'நெடுவரை மிசையிற் பாம்பென விழிதருங்'

'கடுவரற் கலுழி'


என்பது அளவு.

'பாலன்னமொழி'


இது குணம்.

ஏனையமேற்காட்டப்பட்டன.