என் - னின் மேற்சொல்லப்பட்ட உவமைகூறுவார் பலருள்ளுந் தலைமகட்குரியதோர் பொருள் வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. உவமைப்பொருளைத் தலைமகள்கூறில் அவளறிந்த பொருட்கண்ணே உவமை கூறப்படும் என்றவாறு. எனவே தானறியாத பொருட்கண் கூறினாளாகச் செய்யுட் செய்தல் பெறாது என்றவாறு. உதாரணம் தலைமகள்கூற்றுட் கண்டுகொள்க. (26)
|