அகத்திணை இயல்

31மேலோர் முறைமை நால்வர்க்கும்1 உரித்தே.

இது, நிறுத்த முறையானே அறம்காரணமாகப் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்து- மேலோராகிய தேவரது முறைமையை நிறுத்தற்குப் பிரியும் பிரிவு நான்கு வருணத்தார்க்கும் உரித்து. [ஏகாரம் ஈற்றசை]

(31)

1.'மேலோர் முறைமை ஏனோர்க்கும் உரித்தே' என்னாது 'நால்வர்க்கும் உரித்தே' என்றது, முற்கூறிய வணிகரை ஒழிந்த இருவகை வேளாளரையும் கூட்டி என்றுணர்க.

(நச்சி.)